டெல்லி: ஐ. பெரியசாமி வழக்கில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்வதில் 3 ஆண்டு கால தாமதம் ஏன்? என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கல்குவாரி முறைகேடு தொடர்பான 2012ல் பெரியசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கல்குவாரி முறைகேடு வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை 2015ல் உயர்நீதிமன்றம் விடுவித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 2018ல் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.