ராஜபாளையம்: ராஜபாளையத்தில் காவல்நிலையம் அருகே, குப்பைகளை குவித்து வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டுவதற்கு தனியிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தில் திருவனந்தபுரம் தெரு செல்லும் சாலையில் மகளிர் காவல்நிலையம் மற்றும் போக்குவரத்து காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வாறுகால் வசதியோ, குப்பை கொட்டுவதற்கு தனியிடமோ இல்லை.
இதனால், குடியிருப்பு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை காவல்நிலையங்கள் முன் கொட்டுகின்றனர். மேலும், கழிவுநீரையும், அப்பகுதியில் விடுகின்றனர்.