ராஜபாளையத்தில் காவல்நிலையம் அருகே குப்பை குவிப்பால் சுகாதாரக்கேடு

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் காவல்நிலையம் அருகே, குப்பைகளை குவித்து வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டுவதற்கு தனியிடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தில் திருவனந்தபுரம் தெரு செல்லும் சாலையில் மகளிர் காவல்நிலையம் மற்றும் போக்குவரத்து காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு  வாறுகால் வசதியோ, குப்பை கொட்டுவதற்கு தனியிடமோ இல்லை.

இதனால், குடியிருப்பு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை காவல்நிலையங்கள் முன் கொட்டுகின்றனர். மேலும், கழிவுநீரையும், அப்பகுதியில் விடுகின்றனர்.

இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தனியிடமும், வாறுகால் வசதியும் ஏற்படுத்தக்கோரி, பொதுமக்களும், போலீசாரும் நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நகராட்சி நிர்வாகம், குப்பை கொட்டுவதற்கு தனியிடத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். காவல்நிலையங்கள் முன் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: