மதுரை: மோட்டார் வாகன தொழில்நுட்ப மாற்றத்துக்கான நிதியை மத்திய அரசு உடனே உருவாக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாகன உற்பத்தித்துறையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் வேலை இழந்து இருக்கலாம் என்று அவர் தகவல் தெரிவித்துள்ளார்.