×

கொடைக்கானலில் தொடர் சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தொடர்ந்து சாரல் மழையால் குளிர்ந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குற்றால சாரல் போன்று கொடைக்கானலிலும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சாரல் மழை நேற்று மதியம் தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. காலை முதலே அவ்வப்போது பெய்து வந்த சாரல் மழை மதியத்திற்கு அடுத்து தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

இதனால் இளவரசியான கொடைக்கானலில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் பொழுதில் இந்த குளிர் இல்லாமல் இருந்த போதும் இரவு நேரங்களில் இந்த குளிர் அதிகரித்து உள்ளதால் பகல் பொழுதில் மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் இரவுப்பொழுதில் மிகுந்த சிரமத்திற்கு உட்பட்டு உள்ளனர். நேற்று விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்திருந்தனர். மழையில் நனைந்தவாறே கடைவீதிகளிலும், ஓட்டல்களுக்கும் சென்றனர்.

Tags : Kodaikanal, light rain, tourist
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...