திருப்பூர்: திருப்பூரில் சமீபத்தில் பெய்த மழையினால் நொய்யல் ஆற்றின் வெள்ளம் பாய்ந்தபோது சாயக்கழிவு நீர் திறக்கப்பட்டதா? என்பதை அறியும் வகையில் உப்புத் தன்மையை அளவிடும் கருவி பொருத்தி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பூரில் சாயப்பட்டறைகளிலிருந்து கழிவுநீரை பூஜ்ஜிய சதவீத முறையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுகிறது. இதற்காக மாநகரில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர். சாயக் கழிவுநீர் ஆற்றில் திறந்து விடுவதாகவும் இதனால் ஆற்றின் உப்பு தன்மை அதிகரித்து நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் தொடர் புகார் காரணமாக திருப்பூருக்குள் நுழையும் மங்கலம் பகுதியில் இருந்து காசிபாளையம் வரை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நீரின் உப்புத்தன்மையை கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆற்றின் மையப் பகுதியில் இதற்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு அதற்குள் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த கருவிகள் செயல்பாட்டில் உள்ளன. அதில் பாயும் நீரின் தன்மையை இந்த கழிவுகள் உதவியோடு ஆன்லைன் மூலமாக கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.