பாளை அருகே குளத்தில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

நெல்லை: பாளையங்கோட்டை அருகே குளத்திற்குள் வீசப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். நெல்லை சீவலப்பேரி போலீஸ் சரகம் கீழபாலாமடை அருகே கட்டளையில் குளம் உள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதியில் பனங்காடுகள் உள்ளன. இப்பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சீவலப்பேரி  எஸ்ஐ சுதன் மற்றும் போலீசார், எருக்கம் இலைகளுக்கு மத்தியில் கிடந்த பெண் குழந்தையை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியை சேர்ந்த யாரோ ஒரு பெண்,  குழந்தையை குளத்தில் விட்டுச் சென்றிருக்கலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: