×

தென்காசி சிற்றாற்றில் அமலைசெடி அகற்றம்: தன்னார்வலர்கள் பங்கேற்பு

தென்காசி: தென்காசி ஆனைப்பாலம் சிற்றாற்றில் அமலை செடிகள் அகற்றும் பணி ஸ்கைலைட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடந்தது. இதில் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தென்காசி சிற்றாற்றில் ஏராளமான அமலைசெடிகள் படர்ந்து நீரோட்டத்திற்கு தடையாக இருந்துவந்தது. இதையடுத்து ஸ்கைலைட் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் இவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. துவக்க விழாவுக்குத் தலைமை வகித்த இந்திய மனித உரிமை நல இயக்கச் செயலாளர் பக்கீர்மைதீன், பணிகளைத் துவக்கி வைத்தார்.

இதில் நிறுவனர் ராதா, நிர்வாக உறுப்பினர்கள் சைலப்பன், செயலாளர் ஹமீதுசுல்தான், உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன், தஷீன்பாத்திமா, நாகராஜன், சபாபதிகுமார், சாந்தி, ரஞ்சித், அரவிந்தபாலமுருகன், நதிகள் பாதுகாப்பு சமூக நல இயக்கம் ரவீந்திரன், கூட்டுறவு சங்கர், லோகநாயகி டிரக்ஸ் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Tenkasi rivulet, amalaiceti, Sequestration
× RELATED தென்காசியில் ரூ3.5 கோடி ஆம்பர் கிரீஸ் கடத்திய 2 பேர் கைது