கோடியக்கரை அருகே திருடுபோன ஐம்பொன் சிலைகளை காட்டில் தேடும் கிராம மக்கள்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே திருடுபோன ஐம்பொன் சிலைகளை கிராம மக்கள் காட்டில் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பிரசித்தி பெற்ற கோடிமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 14ம் தேதி இரவு மர்ம நபர்கள் பின்புறம் உள்ள மதில் சுவரில் ஏறி உள்ளே புகுந்து கோயிலின் 3 பூட்டுகளை உடைத்து அங்கிருந்த மாரியம்மன், முருகன், தேவசேனா, வள்ளி ஆகிய ஐம்பொன் சிலைகளை திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர வேட்டை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் சாமியாடி காட்டிற்குள் சிலை இருப்பதாக தெரிவித்ததால், அக்கிராமத்தை சேர்ந்த ஆண், பெண் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காட்டிற்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Related Stories: