வேதாரண்யம்: கோடியக்கரை அருகே திருடுபோன ஐம்பொன் சிலைகளை கிராம மக்கள் காட்டில் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பிரசித்தி பெற்ற கோடிமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 14ம் தேதி இரவு மர்ம நபர்கள் பின்புறம் உள்ள மதில் சுவரில் ஏறி உள்ளே புகுந்து கோயிலின் 3 பூட்டுகளை உடைத்து அங்கிருந்த மாரியம்மன், முருகன், தேவசேனா, வள்ளி ஆகிய ஐம்பொன் சிலைகளை திருடி சென்று விட்டனர்.