தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 14.5, திருக்கோவிலூரில் 14.2, விழுப்புரத்தில் 13.5 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளதாகவும், தி.மலை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேத்பட்டில் 7.6, வந்தவாசியில் 6.4 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: