கோவை: பன்னிமடை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் கணேசன் என்பவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.