சென்னை: புழல் அருகே புத்தகரத்தில் மனைவியை கொன்றுவிட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அடுத்த புத்தகரம் திருமால் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் நரேஷ்(39). இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜெய என்பவருடன் திருணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு வருண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மகன் வருண் நேற்று இரவு நடன வகுப்புக்கு சென்றிருந்தார். இரவு 9 மணியளவில் கணவன், மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் நரேஷ் மனைவி ஜெயயை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் மனைவியின் துப்பாட்டாவால் மின்விசிறியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.