நெல்லை: சிஐடியு அகில இந்திய பொதுசெயலாளர் தபன்சென் நெல்லையில் அளித்த பேட்டி: தொழில் துறையின் ஆணிவேராக மின்சாரம் உள்ளது. மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து பலமடங்கு வருவாய் ஈட்டுகிறது. தென் மாநிலங்களில் அரசால் மின்சாரம் கூடுதல் பணம் கொடுத்து தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. மோடி அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம் மற்றும் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக முக்கிய துறையான மின்வாரியத்தையும் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மின்சாரம் என்பது உருளைகிழங்கு, தக்காளி வியாபாரம் அல்ல என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும். .
இது ஆபத்தானதாகும். அரசின் இந்த முயற்சியை முறியடிக்க தமிழகத்தில தொமுச போன்ற அமைப்புகளுடனும் இந்தியா முழுவதும் தொழிற்சங்க அமைப்புகளுடனும் இணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.