சத்தியமங்கலம்: சாலையோரம் நின்றிருந்த யானைஅருகில் சென்று செல்பி எடுக்க முயன்ற நபரை யானை தாக்கியதால் படுகாயமடைந்தார்.ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (36). இவர் நேற்று மாலை ஈரோட்டிலிருந்து தாளவாடி செல்வதற்காக காரில் தனது நண்பர்கள் 3 பேருடன் சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆசனூர் அடுத்துள்ள வன சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் யானைகள் நின்று கொண்டிருந்தன. யானைகளை கண்ட ஞானசேகரன் காரை நிறுத்திவிட்டு அருகே சென்று செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.