தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம்: விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி: தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க புதிய திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.இதுகுறித்து திருச்சி ஏர்போர்ட்டில் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த உள்ளது. இதற்காக புதிய திட்டம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்த திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பாக மாணவ, மாணவிகளிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: