சென்னை: மீன் பிடித்து ெகாண்டிருந்த தமிழக மீனவர்களை பணம் கேட்ட ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட விசை படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், தனித்தனியாக பிரிந்து மீன்பிடிப்பது வழக்கம்.அந்தவகையில், ஆந்திர மாநிலம் நெல்லூர்-ஹரிகோட்டா இடையே சீனிவாசபுரம் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், 5 மீன்பிடி படகுகளையும் மீனவர்களையும் சிறைபிடித்தனர். அப்போது, எங்களுக்கு பணம் தந்தால்தான் படகுகளை விடுவிப்போம் என கூறியுள்ளனர்.