சென்னை: சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் 85 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பணிகளை செய்துவருகிறது. அதன்படி உட்கட்டமைப்பு மேம்பாட்டு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ₹100 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களிடம் கற்பிக்கும் திறனை ேமம்டுபத்த புதிய முயற்சியை செயல்படுத்தபட்டுள்ளது. அதன்படி பாடம் தொடர்பாக ஆசியர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் இந்த கலந்துரையாடல் திட்டம் அமல்படுத்தபட்டுள்ளது.