பிறந்தநாளையொட்டி சிறையில் சசிகலா மவுன விரதம்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனது பிறந்த நாளையொட்டி நேற்று யாரிடமும் பேசாமல் மவுன விரதம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கைதியான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு பிறந்த நாள் என்று கூறப்படுகிறது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், பிறந்த நாளை கொண்டாட முடியாத மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவின் பிரிவை நினைத்து வாடிய அவர், சிறையில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். எனினும், வழக்கம்போல காலை, மதிய உணவு மட்டும் அருந்தியுள்ளார். நேற்று விடுமுறை தினம். இதனால் பெண் கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என்பதால் யாரும் அவரை பார்க்க வரவில்லை. சசிகலாவின் மவுனம் குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் கேட்டபோது, சிறைக்கு வந்த பின்னர் சசிகால, பிறந்த நாளில் மவுன விரதம் இருந்து வருகிறார். அதன்படிதான் இன்றும் அவர் மவுன விரதமர் இருந்தார் என்று தெரிவித்தனர்.

Related Stories: