புதுடெல்லி: மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் தற்போதைய முதல்வர்களின் கீழ் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க பாஜ முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பாஜ இங்கு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தபோது, முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முடிவுக்கு பின்பே, முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், வரும் தேர்தலை தற்போதைய முதல்வர்களின் தலைமையின் கீழ் சந்திக்க பாஜ முடிவு செய்துள்ளது.