×

திருவேங்கடத்தில் பரபரப்பு: வீட்டில் மின்னல் தாக்கி பொருட்கள் சேதம்.. பணம், சேலைகள் எரிந்து நாசம்-தங்க நகைகள் உருகின

திருவேங்கடம்: நெல்லை மாவட்டம் திருவேங்கடம் பஸ் நிலையம் அருகில் வசித்து வருபவர் செல்லையா மகன் வைரமுத்து(39). தொழிலாளி. இவரது மனைவி குருகாளீஸ்வரி(35), ஆசிரியையான இவர் செவல்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திருவேங்கடம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடிமின்னலுடன் சாரல் மழை பெய்தது. இதில் வைரமுத்து வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் வீட்டு மின் இணைப்பில் தீப்பொறி பரவியது.

இதில் வீட்டில் வைத்திருந்த பீரோவின் பின்பகுதியில் துளை ஏற்பட்டு தீபரவியது. இதில் பீரோவில் இருந்த சேலைகள் மற்றும் ரூ.47 ஆயிரம் எரிந்து நாசமானது. நகைகள் வைத்திருந்த பெட்டியும் தீக்கிரையானது. இதனால் நகைகள், வெப்பத்தால் உருகின. சம்பவம் நடந்தபோது வைரமுத்து மற்றும் அவரது மகள் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் குருகாளீஸ்வரி, வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ஷ்ட வசமாக காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து திருவேங்கடம் வருவாய் அலுவலர் மற்றும் விஏஓ கருப்பசாமி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் மின்னல் தாக்கி நகை, பணம் எரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Lightning strikes, lightning strikes, damage to goods
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...