சேலம் : எடப்பாடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி திறந்து வைத்தார். விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், இளந்திரையன் பங்கேற்றுள்ளனர். பின்னர் பேசிய முதல்வர் பழனிசாமி: பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.