திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் பகுதியை சேர்ந்தவர்கள் 17 பேர் மினி வேனில் எஸ்என்புதூர் கருப்பண்ண கோவிலுக்கு சென்றனர். அங்கு நடந்த திருவிழாவில் பங்கேற்க செல்லும் போது திருமானூர் பகுதியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி கிணற்றில் விழுந்தது. இதில் வாகனத்தில் பயணித்த 17 பேர் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.