திருச்சி அருகே மினி வேன் கிணற்றில் கவிழ்ந்து விபத்து: 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மினி வேன் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் பகுதியை சேர்ந்தவர்கள் 17 பேர் மினி வேனில் எஸ்என்புதூர் கருப்பண்ண கோவிலுக்கு சென்றனர். அங்கு நடந்த திருவிழாவில் பங்கேற்க செல்லும் போது திருமானூர் பகுதியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து மினிலாரி கிணற்றில் விழுந்தது. இதில் வாகனத்தில் பயணித்த 17 பேர் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றில் விழுந்ததில் சம்பவ இடத்தில் 2 பேர் பலியாகினர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 6 பேர் பலியாகினர்.இந்த விபத்தில், 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கோமதி, குமாரத்தி, குணசீலன், கயல்விழி, சரண்குமார், சஞ்சனா, எழிலரசி, யமுனா, ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: