திருச்சி: முக்கொம்பில் கொள்ளிடம் கதவணை அருகே தற்காலிக மணல் தடுப்பில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. காவிரியில் நீர் வரத்து அதிகாரித்துள்ளதால் தற்காலிக தடுப்பில் லேசாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பு உடைப்பால் தடுப்பணை அமைக்கும் பணியில் பாதிப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளார்.