கோவை: கோவை பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 120 கனஅடி நீரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார். ஆழியார் அணையில் நீர் திறப்பால் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என கூறப்படுகிறது.