பெங்களூரு: ஆகஸ்ட் 20 ஆம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பாஜக சட்டமன்ற கட்சிக்கூட்டம் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பின்பே நடைபெறும் என எடியூரப்பா தகவல் அளித்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டது தொடர்பான புகாரை சிபிஐ விசாரகிக்கும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் உள்பட பலர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர்.