ஜெய்ப்பூர்: வட மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகாண்ட் மற்றும் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தொடர் கனமழை பெய்தது. கடந்த வாரம் இது சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த இருதினங்களாக அங்கு மீண்டும் கனமழை பெய்து வருகிறது. பஞ்சாபில் பக்ரா அணையிலும் டெல்லியில் யமுனாவிலும் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அங்குள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக காங்க்ரா மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.