பெங்களூரு: கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து பாஜ ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இதுவரை அதற்கு நேரம் வாய்க்கவில்லை.
வட கர்நாடகாவில் பலத்த மழை, காஷ்மீர் மாநிலம் பிரிப்பு, எம்எல்ஏ பதவி இழந்த 17 பேர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது ஆகியவற்றால் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானது. இந்நிலையில் மேலிட அனுமதி பெற்றுள்ளதை தொடர்ந்து, நாளை மறுநாள் முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையை விரிவாக்கம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.