சென்னை: குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு சென்னையில் வருகிற 21ம் தேதி ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அண்ணா மேலாண்மை நிலையம் கட்டுப்பாட்டில் இயங்கும் போட்டி தேர்வுகள் பயிற்சி மையத்தின் மூலம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற 21ம் தேதி குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க பயிற்சி முகாம் காலை 10.30 முதல் மாலை 5.30 மணிவரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 01.09.2019 அன்று நடத்த உள்ள குரூப் 4 தேர்விற்கான தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் இதன்மூலம் பயனடையலாம். இந்த முகாமை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைக்கிறார்.