கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும், ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது: கடும் புயல் வெள்ளம், எது வந்தாலும் பாதிப்பது விவசாயம்தான். ஆனால் அரசு எங்களை கண்டு கொள்வதில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட எங்களின் நிலையை கருதி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டாவுக்கு வெறும் 10 ஆயிரம் கன அடிதான் தண்ணீர் வருகிறது. ஆனால், அதிக தண்ணீர் வருகிறது என்ற மாயையை உருவாக்கியுள்ளார்கள். காவிரியில் தண்ணீர் வருகின்ற இந்த நேரத்தில் விதை நெல் வாங்க கூட விவசாயிகளிடம் பணம்
இல்லை.