சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 21ம்தேதி திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21ம்தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.