சென்னை: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை 6 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இலங்கை கண்டியை சேர்ந்தவர் அழகேஸ்வரி (48), சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னை வந்தார். இவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர். அவர் அடிக்கடி சுற்றுலா பயணியாக சென்னை வந்தது தெரியவந்தது. அவ்வாறு வரும் அழகேஸ்வரி மறுநாளே இலங்கை செல்வதும் பாஸ்போர்ட் மூலம் தெரியவந்தது. எனவே, அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. ஆனால் அவர், ‘அதுதான் சோதனையை முடித்து விட்டீர்களே.. இனிமேலாவது என்னை வெளியில் அனுப்புங்கள்’ என்றார்.