மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று களியக்காவிளை, மார்த்தாண்டம், கருங்கல், நித்திரவிளை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தில் உரிய அனுமதி சீட்டு பெறாமலும், வரி செலுத்தாமலும் இயங்கிய கேரள பதிவெண் கொண்ட 4 ஆம்னி பஸ்கள் சிக்கின.