×

உரிய அனுமதி சீட்டு பெறவில்லை: 4 கேரள ஆம்னி பஸ்கள் பறிமுதல்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று களியக்காவிளை, மார்த்தாண்டம், கருங்கல், நித்திரவிளை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் தமிழகத்தில் உரிய அனுமதி சீட்டு பெறாமலும், வரி செலுத்தாமலும் இயங்கிய கேரள பதிவெண் கொண்ட 4 ஆம்னி பஸ்கள் சிக்கின.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோழிப்போர்விளையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் கொண்டு சென்றனர். மேலும் ஒவ்வொரு ஆம்னி பஸ்சுக்கும் தலா ரூ.47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீதான நடவடிக்கை தொடரும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Tags : Passport, 4 Kerala Omni buses, seized
× RELATED பொங்கல் பண்டிகைக்காக இதுவரை 12,865...