காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நிறைவை அடுத்து சுவாமி காட்சி தந்த வசந்த மண்டபம் மூடப்பட்டது. வைபவம் நிறைவடைந்ததை அடுத்து இனி 40 ஆண்டுகளுக்குப் பிறகே அத்திவரதரை தரிசிக்க முடியும். ஆகம விதிப்படி அத்திவரதருக்கு தைலக்காப்பு, பட்டு வஸ்திரம், வெள்ளி பூணூல் அணிவிக்கப்படுகிறது. ஆகம விதிகள் நிறைவடைந்த பிறகு அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் அத்திவரதர் எழுந்தருளுகிறார்.