சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4, எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை உயர்வு நாலா மறுநாள் முதல் அமலுக்கு வரும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.