×

போக்குவரத்து விதிமீறல்களுக்கெல்லாம் வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்வது தேவையற்றது: நீதிபதி பானுமதி கருத்து

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கெல்லாம் வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்வது தேவையற்றது என உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தெரிவித்துள்ளார். விதிகள் மீறும் வழக்கறிஞர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என நீதிபதி கிருபாகரன் கூறியதற்கு நீதிபதி பானுமதி மாற்றுக்கருத்து கூறியுள்ளார். சாதாரண புகார்களில் சிக்கும் வழக்கறிஞர்களை எச்சரித்து கண்டித்து அனுப்பலாம் என உச்சநீதிமன்ற நீதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் நீதிபதி பானுமதி கலந்துகொண்டு பேசினார்.


Tags : Traffic Violator, Prosecutor, Suspended, Judge Banumati
× RELATED பெண் வாங்கிய விவசாய கடனை சொந்த...