×

திருச்சியிலிருந்து சென்னை எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரயில் நாளை இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: திருச்சியிலிருந்து சென்னை எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரயில் நாளை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் நாளை இரவு 9.10க்கு புறப்படும் சவிதா சிறப்பு ரயில் மறுநாள் காலை 4 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என கூறியுள்ளனர். நாளை மறுநாள் சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து நாளை மறுநாள் பகல் 12 மணிக்கு ரயில் புறப்பட்டு திருச்சிக்கு மாலை 6.15 மணிக்கு சென்று சேரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags : Trichy, Chennai Egmore, Suvida Special Train, Tomorrow, Traffic, Southern Railway
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...