கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் வன அலுவலகத்தை கிராமமக்கள் சூறையாடினர். ஐயுரை சேர்ந்த அப்பையா மற்றும் நாகராஜன் ஆகிய இருவரும் இயற்கை உபாதையை கழிக்க தோட்டத்திற்கு சென்ற போது அங்கு வந்த ஒற்றை யானை இருவரையும் தாக்கியுள்ளது. இதில் அப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நாகராஜ் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக  தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் ஐயூர் வன பகுதியில் உள்ள வன அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்குள்ள நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்களை உடைத்தும் வனத்துறையினரின் இருசக்கர வாகனம்,  மினி பேருந்துகளை தாக்கி  போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்பையா உடலை பிரேத பரிசோதனைக்கு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: