தண்ணீரை சேமிக்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறோம்: வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி

நெல்லை: தண்ணீரை சேமிக்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறோம் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். நெல்லையில் தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது குறித்த கருத்துகேட்பிற்க்கு பிறகு சத்யகோபால் பேட்டியளித்துள்ளார். தென்காசியை தனி மாவட்டமாக பிரிப்பது குறித்து முதல் கருத்துகேட்பு கூட்டம் நடத்தியுள்ளோம். மேலும் நெல்லையை அடுத்து இன்று பிற்பகலில் தென்காசியில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெறும் எனவும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: