பழநி அருகே கோயில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பழநி, : பழநி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் மகாலட்சுமியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் 1ம் தேதி பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தலையில் தேங்காய் உடைக்கும் விழா நேற்று நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தலையில் தேங்காய் உடைத்து  கொண்டனர்.  

பின்னர் மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் அலங்கார ரதத்தில் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கரகாட்டம், கதம்பாட்டம், சேவையாட்டம், நாதஸ்வர இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: