பழநி, : பழநி அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் மகாலட்சுமியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் 1ம் தேதி பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். முக்கிய நிகழ்ச்சியான தலையில் தேங்காய் உடைக்கும் விழா நேற்று நடந்தது. இதில் 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தலையில் தேங்காய் உடைத்து கொண்டனர்.