மும்பை: மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச்சந்தை (நிப்டி) நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கியதும் சரிவை சந்தித்தன. ஒரு நிலையில் சென்செக்ஸ் 337 புள்ளிகள் சரிந்தன. நிப்டியும் சரிவை சந்தித்து மொத்தம் 10,924 புள்ளிகளில் நின்றது. பிற்பகலில் ஆட்டோ மற்றும் சில வங்கிகளின் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியதால் சந்தை நிலவரம் தடுமாற்றத்தில் இருந்து ஏற்றம் பெற்றது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 39 புள்ளிகள் உயர்ந்து மொத்தம் 37,350 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல், நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து மொத்தம் 11,049 புள்ளிகளில் நிலை பெற்றது. காலையில் தடுமாறினாலும் பிற்பகலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.