இஸ்லாமாபாத்: எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறி, இந்திய துணை தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய துணை தூதர் கவுரவ் அலுவாலியாவை அழைத்து இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில், ‘‘எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஒட்டியுள்ள லிபா, பாட்டல் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் ஒரு பாகிஸ்தான் வீரர் மற்றும் 2 பொதுமக்கள் உயிரிழந்தனர்.