புதுடெல்லி: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்ட கருத்துகளுக்காக ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார். நாட்டின் 73வது சுதந்திர தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றினார். அப்போது பேசிய அவர், `பெருகி வரும் மக்கள் தொகையால், எதிர்கால சந்ததியினருக்கு எண்ணற்ற பிரச்னைகள் உண்டாகும். நாட்டின் வளத்தை உருவாக்குபவர்களை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்காமல் மதிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கிற்கு பதிலாக சணல், துணியினாலான தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்,’ என்று அறிவுறுத்தினார்.