ஓய்வா? நான் எப்போ சொன்னேன்??

வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல்  உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.  ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். நேற்று முன்தினம் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் கேலுக்கு 301வது ஒருநாள் போட்டி. அவரும் 301 எண் சீருடை அணிந்து விளையாடினார். அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது இந்திய வீரர்கள் வாழ்த்து வழி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கேல் நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘ நான் ஓய்வு பெற போகிறேன் என்று எப்போதும் சொல்லவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  கடைசி போட்டியில் கேல் 5 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 72 ரன் விளாசினார்.

Related Stories: