சென்னை: டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன் வெற்றிப் பெற 127 ரன் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். டிஎன்பிஎல் தொடரின் 4வது சீசன் இறுதிப் போட்டி சென்னையில் நடந்தது. இறுதிப்போட்டியில் 3வது முறையாக சேப்பாக் சூப்பர் கில்லீசும், தொடர்ந்து 2வது முறையாக திண்டுக்கல் டிராகன்சும் களம் கண்டன. டாஸ் வென்ற கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கங்கா தர் ராஜு 4 ரன்னில் ரோகித் பந்து வீச்சிலும், கோபிநாத் ரன் ஏதும் எடுக்காமல் கவுசிக் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் விஜய்சங்கரை ஒரு ரன்னில் வெளியேற்றினார் கவுசிக். அப்போது அணி 4.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 19 ரன்.