சென்னை: தாய்லாந்து தலைநகர் சார்ஜாவில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த சூசை அலெக்ஸாண்டார் (62), ராபர்ட் (39) என்ற இருவரும் மியான்மர் நாட்டுக்கு சென்று விட்டு தாய்லாந்து விமானத்தில் சென்னை வந்தனர். இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். இருவரது உள்ளாடையிலும் 210 கிராம் தங்க கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு 8.3 லட்சம். மேலும், இவர்கள் உடைமைகளை சோதனை செய்தபோது வெளிநாட்டு மதுபானங்கள் 20 பாட்டில்கள் இருந்தன. மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் 20 பண்டல்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட் பண்டல்கள் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.