அரசு பஸ் மீது கல்வீசிய 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி,: தூத்துக்குடியில் இருந்து 28.9.2014ல் நெல்லை சென்ற அரசு பஸ் மீது, புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் அப்பகுதியை சேர்ந்த அய்யப்பராஜ் (25),  லட்சுமணன் (24) மற்றும் ஒரு சிறுவன்  சேர்ந்து கல்வீசி தாக்கினர்.  இதில் பஸ்சின்  முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் டிரைவர் முருகன் காயமடைந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை தூத்துக்குடி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கவுதமன் விசாரித்து  அய்யப்பராஜ், லட்சுமணன் ஆகிய 2 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனைவிதித்து தீர்ப்பு கூறினார். சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது.

Related Stories: