கரூர்: கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2-வது தளத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தப்பட்டதால் படியேறி செல்லமுடியாமல் தவித்தனர். மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது புதன்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தரைத்தளத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 2-வது தளத்திற்கு முகாமை மாற்றியதால், மாற்றுத்திறனாளிகள் படியேறி செல்லமுடியாமல் சிரமப்பட்டனர்.இதுபற்றி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி முகாமினை சிலர் புறக்கணித்தனர். தரைத்தளத்தில் முகாமை நடத்த ஏற்பாடுகள் செய்வதாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உறுதியளித்ததால் அனைவரும் முகாமிற்கு திரும்பினார்.