திருமலை: கடப்பா அருகே வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்ற 9 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 108 கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.ஆந்திராவின் ராஜம்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் காதர்வலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ராஜம்பேட்டை மண்டலம், எஸ்.ஆர்.புரம் வனச்சரகத்தில் வனத்துறையினர் நேற்று தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது, ஜல்லி கோணா அருகே செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.