சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயம் அருகே பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கியுள்ள செரின் திரேசா டோமினிக் (20) மற்றும் 2 தோழிகள் நேற்று முன்தினம் இரவு தங்கள் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக வைத்துவிட்டு தேவாலயத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் விடுதிக்கு வந்து பார்த்தபோது, 3 விலை உயர்ந்த செல்போன் கொள்ளை போனது தெரிந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த செரின் திரேசா டோமினிக் விடுதி காப்பாளரிடம் தெரிவித்தார். 3 பேருடைய செல்போன்களிலும் முக்கிய தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.