மேட்டூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால் பூமிக்கு தான் பாரம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசை மத்திய அரசு கலைத்தால் கூட அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும் என சிதம்பரம் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து முதலமைச்சர் கூறியிருப்பதாவது : ப.சிதம்பரம் இத்தனை ஆண்டுகாலம் மத்திய அமைச்சராக இருந்தும் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்றும் மேலும் அவர் பூமிக்கு பாரமாக உள்ளார். அவர் தனித்தன்மையுடன் எந்த திட்டமும் கொண்டுவந்து செயல்படுத்தவில்லை, எந்த நிதியும் கொடுக்கவில்லை, எந்த ஒரு புதிய தொழிற்ச்சாலையும் அமைக்கவில்லை, புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை, காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, பாலாறு பிரச்சனை என எதையும் அவர் தீர்க்கவில்லை.